செவ்வாய், 12 ஜனவரி, 2016

எதிர் பார்ப்புகளால் மட்டுமே ஏமாற்றமும், தடுமாற்றமுமே!!!!! 

வெள்ளி, 8 ஜனவரி, 2016

பொங்கல்

பொங்கல் 
போகி, மணம், மாட்டு, பூ
என நான்காம்
எம் பாட்டன்
படைத்திட்டான்.

அகத்தையும்,
புறத்தையும்
அப்பழுக்கில்லாமல் 
அழகுற செய்திடவே
போகி.

இல்லறத்தில்
உள்ளோரெல்லாம்
உள்ளத்தில்
உவகை பொங்க
வைத்திடவே
மணப்பொங்கல்.

உலகின்
உயர்ந்த இனமாம்
மனிதன் உண்ண
உழுதிட்ட
எருதுகளை
தொழுதிடவே
மாட்டுப் பொங்கல்.

மார்கழிக்குளிரில்
மனித விருட்சத்தை
துளிர்த்திடச் செய்யும்
மங்கையர் படைத்த
சாண கணபதிக்கு
சரணம் சொல்லி
பூ மாதரை போற்றிடவே
பூப்பொங்கல்.

வேறொருவன்
கலாச்சாரத்தை
துதிக்கும் நாம்,
தமிழ்ப் பாட்டனின்
நோக்கமேதும் அறியோம்.

இனி, இவ்விழாவை
ஏனைய உலகம் அறிந்திடச் செய்யாமல்,  
'இனிய விடுமுறை தினம்' என
மறைத்துரைப்போம்
அடுத்த தலைமுறைக்கு.  

                                           -வி. பாலா/