பாரதியின் வேண்டல்
நின்னைச் சிலவரங்கள் கேட்பேன் - அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் - என்றன்
முன்னைத் தீவினைப் பயன்கள் - இன்னும்
மூளா தழிந்திடல் வேண்டும் - இனி
என்னைப் புதிய உயிராக்கி - எனக்
கேதுங் கவலையறச் செய்து - என்றும்
சந்தோசங் கொணடிருக்கச் செய்வாய் .