சனி, 13 பிப்ரவரி, 2016

வேண்டும் எனக்கு

கண்விழி இரண்டில்
கரைந்திட வேண்டும்.

காதோரம் அரங்கேறும்
காதணிகளின்
கலைநயத்தை
கண்டிட வேண்டும்.

இதழ்கள் சொரியும்
தேன் பருகிட வேண்டும்.

கன்னம் மேவிய
சதையை
கவ்வி ருசித்திட வேண்டும்.

கால் கொலுசுகளின்
காதல் மொழியை
கேட்டிட வேண்டும்.

உன் அணுத்துகள்
ஒவ்வொன்றையும்
ரசித்திட வேண்டும்.

ஒருமுறை அல்ல,
ஓராயிரம் முறை.



1 கருத்துகள்:

12 மே, 2016 அன்று 7:11 AM க்கு, Blogger Tamil Bharathan கூறியது…

ஓராயிரம் முறை அல்ல...............
ஒவ்வொரு முறையும் .

 

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு