சனி, 21 ஜனவரி, 2017

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டுக்காக நாம் அனைவரும் சேர்ந்து போராடுவது பெருமைையாய் இருக்கிறது.
ஆனால் நமக்கு இது மட்டும் போதாது; நாம் இப்போராட்டத்தில் காட்டிய வீரம், ஒழுங்கு, கண்ணியம், பொறுப்புணர்வு, பெண்மை போற்றுதல், மனித நேயம், சக மனிதனுக்கு உதவுதல் போன்ற ஆகச் சிறந்த குணங்கள் அனைவரிடமும் வெளிப்பட்டன. இவை எந்நாளும் நம்மில் குடி கொண்டு நம் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும்.
இதன் தொடர்ச்சியாக, நாம் செய்ய வேண்டியவை என நான் கருதும் கருத்துக்கள்
1) நம் கண் முன்னர் நடக்கும் சிறு சிறு தவறுகளைக் கண்டிப்போம் ஒன்றை கூடி அமைதியான முறையில்,
2) பெண்மையை மதித்துப் போற்றுவோம்; தேவையெனில் உதவி செய்து காத்திடுவோம்.
3) சினிமா, நடிகர், நடிகைகள், விளையாட்டு, போன்றவற்றை பொழுது போக்காக மட்டுமே காண்போம்.
4) ஊழல் செய்யும் மனிதர்கள் பற்றி அனைவருக்கும் தெரியும் வண்ணம் பிரபலப் படுத்தி பதவி நீக்கம் செய்ய வழிகோலுவோம்.
5) ஒட்டுக்குப் பணம் வாங்காமல் கண்ணியம் காப்போம்.
6) தமிழ் வழிக் கல்விக்கு ஆதரவு நல்குவோம்; அருகில் உள்ள அரசு பள்ளிகளின் தரம் சோதிப்போம்.
7) இயற்கையைக் காப்போம்; நீர் தேவை அறிந்து செலவிடுவோம்; மரம் வளர்க்கப் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுப்போம்.
8) பாரம்பரியம் பற்றி தெளிந்து சொல்லுவோம்;
9) வீடுகளில் நாடகங்களைத் தவிர்த்து பயனுள்ள செய்திகளை விவாதிப்போம்.
10) உடல் நலம், மனநலம், சுற்றுப்புற நலம் பேணுவோம்.
வி. பாலா/
21.1.17

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு