மாணவர் போராட்டம்
எம் போராட்டம் எமக்கு
எதும் வேண்டுமென்று அல்ல.
எம் போல் பல மக்களை
எமனாய் இருந்து வதைத்த
எம் குல துரோகியை
ஏன் காக்க முயல்கிறீர்? என்றே!
பசி, பட்டினி, பஞ்சம்
பார்த்ததுண்டா நீ?
பசி, வலி அறியாமல்
பாசமாய் வளர்க்கப்
பட்டவர்கள் நங்கள்..
ஒரு நாள் விரதம்
உயிரை உரசியது எமக்கு.
உறுப்புகளை அறுத்து
உருகுலைக்கும் வலியை
உணர்கிறோம்....
உயிர் வாழ விடுங்கள்
உடமைகள் கூட வேண்டாம்!
பாட்டாளியின் பணத்திலே
பகட்டாய் பேசித் திரிகிறாய்
பதவியில் உள்ளதால்!
உணர முயலுங்கள்
உரக்க பேசாதீர்கள் இனியும்... - வி.பாலா/-