தாயின் கதறல்
ஆதி முதல்
அந்தம் வரை
அவன் வாழ்க்கைக்கு
நாந்தேவை.
அணு முதல்
அனைத்துயிருக்கும்
நான் கூடு
இந்த மனுசப் பய
வந்ததால
ஆனேன்
ரொம்பச் சூடு!
முந்நூறு கோடிக்கு
மேல்
மக்களைப் பெத்தவ
மூச்சுவிட முடியாமா
முக்கித் தவிக்கிறேன்
சூட்டாலா...
பால்வெளியில் இருக்கேன்
நான் ஒரு மூல,
என்னைப்போல
யாரேனும் இருக்கா
எனப் பார்ப்பதே
அவன் வேல!
என்னென்னமோ
கண்டுபுடிச்சு
எங்கெங்கோ
அனுப்பி வைக்கான்
என்னை
ஒருநாளும்
கண்டுக்கலயே!
உள்ள கொதிக்கிற
என் குமுறலை
எரிமலையா
எச்சரிச்சும்
எஞ்சூடு தணிக்கலயே!
இன்னும்
எத்தனை
வருசம் இருந்திடுவ
என்னைய
எரிச்சு?
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு