கையால் + (ஆகாதவனும்) (ஆனவனும்) ....
கடுகும் உருவாக கைகள் தேவை.
கடலை கூட ரசிக்க கண்கள் மட்டுமே போதுமானது.
கால மாற்றங்களுக்கு காரணம்,
கைகளும், அவர்களின் காலங்களுமே....
கைகளை ஆக்கப்பணிகளுக்கு பணித்ததால்
கற்பனைக்கு எட்டா வளர்ச்சி..
காசு என்ற காகிதம் கருத்தாழம் கொண்டவனையும்
கவலை கொள்ள வைத்துள்ளது கடிவாளம் இல்லாததால்.
கைகளைக் கட்டிக் கொண்டு, கலையையும்,
காண்பனவற்றையும் ரசித்தால்
காணாமல் போகுமே... நம் இனமே!!!
- வி.பாலா.//