திங்கள், 23 நவம்பர், 2015

மாற்றம் ஏன்?

நானா இப்படி,
உண்மைதான் நானே,
ஏன்? எப்படி? எதனால்?                  
என்னில் மாற்றம்?                                        
நீ; உன் வருகை; என் வாழ்வில்.  
அதனால் இந்த மாற்றம்.      

என்னதானடி மாற்றினாய்            
என்னில் அப்படி?                        
எனக்காகத் துடித்த இதயம் உனக்காக!
எனக்காகச் சிந்தித்த மூளை, உன்னையே சிந்திக்க!      
                  
எனை ரசித்த கண்கள், உனைத் தேட!
இன்னிசை கேட்ட காதுகள், உன்னிசை கேட்க!                    
கடுமையாய் உழைத்த கைகள்,  உன் மென் கரம் பற்ற!                
ஓடியாடிய கால்கள், உனைச் சுற்ற!    

ஏனடி என்னில் இத்தனை மாற்றம்?
இவை உன்னிலுமா?