சனி, 13 பிப்ரவரி, 2016

நீ வேண்டும் எனக்கு

விடியற்காலை விரல்களால்
விளையாடிடவும்,

தேநீர் தரும் வேளையில்,
தேகம் சிலிர்க்கும் வண்ணம்
தாவி அணைத்திடவும்,

குளிக்கச் செல்லும்முன்
குழந்தையாய் அடம்பிடித்து,
கூட அழைக்கும்போதும்,

குளித்தபின் துண்டை விடுத்து,
துவட்ட உன் சேலை
முந்தானையை  
முறுக்கி இழுக்கும்போதும்,

சமயலறையில் சப்தமின்றி
உன் பின்னால் வந்து
சல்லாபிக்கவும்,

சமையல் முடிந்தது, முடிந்தது என்று
மூச்சு முட்ட
முத்தமிடவும்,

ருசி பார்க்க என
நீ ஊட்டி விடுகையில்,
வலிக்காமல் உன் பிஞ்சு
விரல்கள் கடித்திடவும்,

அவசரமாக அலுவலகம்
கிளம்பும் வேளையில்
அன்பாய் ஒரு முத்தமிடவும்,

மனதை உன்னிடம் வைத்து
மதிய உணவை திறக்கையில்
மயங்கிடவும்,

சோர்ந்து வீடு திரும்பும்போது,
மல்லிகை போல் பூத்த
உன் பொன் சிரிப்பை காணவும்,

சிற்றுண்டி கொடுக்கையில்
சில பல விசயங்களோடு,
விசமங்கள் பண்ணவும்,

எல்லா வேலைகளுக்கிடையிலும்,
என்னையே ரசிக்கும்
உன்னை ரசிக்கவும்,

இரவு ஒன்றாய் உண்டு,
ஊர் கதை பேசி செல்லமாய்
ஊடல் கொள்ளவும்,

ஊடலின் முடிவாய்
சண்டையிட்டு தினமும்
கூடல் கொள்வதுமாய்
வேண்டுமடி நீ எனக்கு....




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு