செவ்வாய், 26 பிப்ரவரி, 2013

பட்ஜெட்!!!!!!!!!!!




வருட வருடம்
வளர்கிறது வறட்சியும்,
வாக்குறுதிகளும்......        - வி. பாலா/-

வெள்ளி, 22 பிப்ரவரி, 2013

இந்தியா - இன்று


இறையாண்மையின் தேசம்,
இயற்கையின் வாசம்  வீசும்  பூமி - என்றோ?

இன்று இன்னல்களின் இமயம்,
கயவர்களின் கூடாரம்,

குண்டுகள் வெடித்திடும்
போர்க்களம்...

குருதிகள் பொங்கிடும்
புண்ணிய பூமி.

கலவரங்கள் பெருகிடும்
களோபர பூமி,

ஊழல்கள் நடந்திடும்
உத்தமர் பூமி,

என்று விலகும்  எந்தன்
தேசத்தின் கரைகள்...

என்று மறையும் எங்கள்
தேகத்தின் ரணங்கள்...

என்று மீளும் எங்கள்
மழலையின் சிரிப்புகள்...

என்று என்று ஏங்கியே
நாளும் கழிகிறதே..... 

திங்கள், 18 பிப்ரவரி, 2013

அன்பு தமிழ் நாடு!!!!!!!!!!!

அன்பு தமிழ் நாடு!!!!!!!!!!!
அங்க அங்க பிரச்சனை!

அரசியல்வாதிகள் வேற 
அப்ப அப்ப அறிக்கை!

அடிகடி பவர் கட்!
அதிரடியான பவர் ஸ்டார் கட் அவுட்!

விஸ்வரூப பிரச்சனை!
விவசாயிகளை கொன்னுடுச்சு!

சினிமாக்கு தர importance
சிறு வர்த்தகர்களுக்கு எங்க புரியும்?

தினம் ஒரு பிரச்சனை
தீர்க்கவே முடியாதுன்னு மறந்துடுவோம்!     

சின்ன சின்ன பிஞ்சுக கிட்ட சில்மிஷம்
சினிமாகரன் சொன்ன தான் போராட்டம்!

இப்படியே போகுது டெய்லி
இங்க என்ன தான் பண்ண முடியும் நாம?

பேஸ்புக்ல மட்டும் தான் பொலம்ப முடியும்
பேக் ஏஜ் வாங்கணுமே! என்ன பண்ண ?
                                                                                                  - வி.பாலா/-

ஞாயிறு, 17 பிப்ரவரி, 2013

இரு வருடங்களுக்கு பின் வசந்தம்!

இதமாய் இருக்கிறது!
இரு வருடங்களுக்கு பின் உந்தன்
இதழ்களின் சப்தம்...!

இனியும் வேண்டாம்
இருவருக்கு இடையே
இடைவெளி.......!

இந்தப் பிறவியில்
இணைந்து இருப்போம்
இறக்கும் வரை......!

இதயங்களால்
இணைந்திருப்போம்
இன்பமாய்.....!

இயற்கையே
இசைந்துள்ளது
இருவரையும் ஒன்றாய்......!

இந்த நொடி இன்பம்!!!
இனி வேண்டமே துன்பம்!

இதயத்தை கனக்க வைத்து
இமயத்தை தலையில் வைத்திடதே!

இனி ஒரு பிரிவு எனக்கு
இறப்பில் மட்டுமே உன்னிடம்
இருந்து வேண்டும் அன்பே!
 
                                                                  - வி.பாலா/-



சனி, 16 பிப்ரவரி, 2013

இளைஞர்கள் ...!!!!!!!!!!



ரசிக்கவும் ருசிக்கவும் 
நேரமின்றி - இயங்கிடும் 
இயந்திரங்கள்........!
                                                       - வி.பாலா /-
*************************

தினச்செய்தி

நாளும் நாரிடுதே 
நாளேடுகளில் 
நாடாளும் 
நல்லவர்களின் செல்வாக்கு!

பகீர் என்கிறது இதயம் 
பகட்டாய் பேசிடும் புன்னியர்களின் 
பாசாங்கு!

ஆன்மிக போர்வையில் 
ஆணாதிக்கம்!
அப்பாவிப் பெண்கள் பாதிப்பு! 

கலைத்துறையில்  கலகலப்பு, 
கலவரத்தில் காவல்துறை
கண்காணிப்பு!

கருமாதி முடிந்த பின்னர்
கண்ணீர் அஞ்சலி! 
கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டு!

பகுத்தறிவுவாதிகளின் 
படைப்பாற்றல்! 
பகுத்து அறிவித்தனர் 
பாதி என் சாதி என்று!  

திக் திக் தினச் செய்திகள்
திருந்துமா என் தேசம்?

என்று விடியும் 
எமக்கான விடியல்  
எதிர்கலமாவது 
எங்களுக்காக.... இருக்கட்டும்...
                                                                      - வி. பாலா /-
   

வியாழன், 14 பிப்ரவரி, 2013

காதல்


இனம் புரியாத உணர்வு
இரு மனங்களின் உரசலால்!

இளமை ததும்பும் துள்ளல்
இரு விழிகளின் சங்கமத்தால்!

இதழ்கள் கடந்து
இமைகள் பேசும் மௌன மொழி!

இதயங்களால் காதலிப்போம்
இதழ்களை கட்டில் வைப்போம்!


இங்கும் அங்கும் கூடிடாமல்
இரு விழிகளால் குலவிடுவோம்!

இரு உடல்கள் சங்கமிக்காமல்
இதயங்களால் சரித்திரம் படைப்போம்!


இங்கிதமாய் இருந்திடுவோம்
இனி வரும் இளைஞர்களுக்கும்!

இயன்ற வரை காதலிப்போம்
இயல்பாய் இருந்திடுவோம்!
                                                                     - வி. பாலா /-



புதன், 13 பிப்ரவரி, 2013

நரேந்திர மோடி

வல்லரசு!!!!!!!!!

ஆம் என் இந்தியா வல்லரசு
இமயம் முதல் குமரி வரை
வாழும் சில மனிதங்களில் மட்டுமே
வல்லரசு....

வெட்கி தலை குனிகிறேன்
இலஞ்சப் புற்று நோயின் பிடியில்
இன்னமும் என்  இந்தியா.

மருந்து கொண்டு வர வேண்டும்
என் தலைவா! நீ.
அமெரிக்காவிற்கே
ஆளுமை கற்றுக் கொடுத்த - உந்தன்
ஆண்மை வேண்டும் அரசியல்வாதிகளுக்கு.

மதத்தின் பெயரால் உன்
மனித நேயத்தை இழிக்கிறார்கள்
மடையர்கள்.....

கலாம் கண்ட கனவை,
காண்கிறோம் நாங்களும் - அது
கலங்கிய இந்தியாவை
தெளிய வைக்க உன்னால் மட்டுமே முடியும் என்று......
                                                                                                                           - வி. பாலா /-