இறையாண்மையின் தேசம்,
இயற்கையின் வாசம் வீசும் பூமி - என்றோ?
இன்று இன்னல்களின் இமயம்,
கயவர்களின் கூடாரம்,
குண்டுகள் வெடித்திடும்
போர்க்களம்...
குருதிகள் பொங்கிடும்
புண்ணிய பூமி.
கலவரங்கள் பெருகிடும்
களோபர பூமி,
ஊழல்கள் நடந்திடும்
உத்தமர் பூமி,
என்று விலகும் எந்தன்
தேசத்தின் கரைகள்...
என்று மறையும் எங்கள்
தேகத்தின் ரணங்கள்...
என்று மீளும் எங்கள்
மழலையின் சிரிப்புகள்...
என்று என்று ஏங்கியே
நாளும் கழிகிறதே.....