புதன், 14 ஆகஸ்ட், 2013

சுதந்திரக் கொண்டாட்டம்



தேசியக் கொடி ஏற்றும் நேரம்
முப்படைகளும்
முச்சந்தியில்!!!


எதார்த்தம்


செம்மறியடுகளாய்
வாழப் பழகிவிட்ட பிறகு
எத்தனை சீர்திருத்தங்கள் வந்தாலும்
சீர்படுத்த முடியாது!

- வி. பாலா    

வாழ்வே வில்


வளைந்து கொடுத்ததால்
வானை வளைத்து நிற்கிறது
வானவில் !!!!!!

- வி. பாலா

வியாழன், 8 ஆகஸ்ட், 2013

இந்திய நாடாளுமன்றம்

வாய் சொல் வீரர் பலருண்டு
வம்புக்கு வந்தாலும்,
வாரி சுருட்டிக் கொண்டு
வாதம் செய்ய இங்கு உண்டு பதினாயிரம் வீரர்கள்
இப்படிக்கு
.
.
.
.
.
.
.
.
.
.
.
இந்திய நாடாளுமன்றம்
 

புரிதல்


யாரும் சொல்லி வந்தது இல்லை - இந்த
ஊரும் சொல்லி தந்தது இல்லை.
எப்படிச் சொல்லி புரிய வைப்பது
இவ் வயோதிகர்களுக்கு ?
எம் இளைஞர்களுக்கும்
.
.
.
.

தேசப் பற்று உண்டென்று!!!



மழை



வறுமையின்
துகிலுரித்தது வானம்
அடை மழையாய்!!!!

- வி. பாலா  

இயற்கை!!!!!

முடித்து வைப்பதற்காகவே
அனைத்தையும் துவக்குகிறது
இயற்கை!!!!!

- வி. பாலா