செவ்வாய், 20 ஏப்ரல், 2010

நண்பனின் கோபம்?

கொலை வெறி கண்ணில் தென்பட ,
குங்குமம் போல் கண்கள் சிவந்திட,
உடல் ஒரு நிலையில் நில்லாது உதறிட,
ஊரே வரினும் எதிர்த்திடும் துணிச்சல் கொண்டவன்,
உதட்டினில் உருவானது உண்மையாய் ஒரு புன்னகை,
எதிர்த்தவன் நான் என்பதால்!

தோழியின் ஆறுதல்....

தோற்று விட்டோமோ என எண்ணும்
நொடியில்...........
தோழி சொன்னால்,
"நீ தோற்க மாட்டாய்
ஏனென்றால்
உன் நட்பை நீ தோற்க விடமாட்டாய்" என்று
என் தோல்வியை
அவளுடயதாய் எண்ணி...
என்னே விந்தை
எங்கிருந்தோ வந்தவளுக்கு ,
என் மேல் தான் என்ன ஒரு நம்பிக்கை!
எப்போதும் இருந்திடு என்னுடன்
எந்தத் தோல்வியும் எனக்கு வெற்றியே
நீ இருப்பதால்......
தோழி
....