வெள்ளி, 16 செப்டம்பர், 2016

மனமுள்ள தமிழனமே

தமிழா 
உனக்கு ஏன் இவ்வளவு கோபம்?

ஆற்று மணலை 
அள்ளி அனுப்பியபோது
வராத கோபம்,

இருட்டில்
இயற்கை
வளமனைத்தும்
இல்லாமல்செய்தபோது
வராதகோபம்,


அரசின் இலவச 
அரிசியை 
அமுக்கி அனுப்பியபோது
வராத கோபம்,

ஏய்த்துப் பிழைக்கும் 
அரசியல் வியாபாரி
எளியவரை ஏளனம் செய்தபோது
வராத கோபம்,

வாய்க்கால், வரப்புகள்
குளம், குட்டைகள்,
ஆறு, அணைகள் 
தூர்வாரப் படாதபோது
வராத கோபம்,

பச்சிளம் பிஞ்சுகள்
பாலியல் தொல்லைக்கு
பலியானபோது 
வராத கோபம்,

நள்ளிரவு நேரங்களில்
நயமாய் விலைவாசி
ஏற்றப்படும்போது
வராத கோபம்,

காசு கொடுத்துக், 
கடவுளையும்,
கல்வியையும்
கைக்கொள்ளும்போது
வராதகோபம்,

எந்தச் சான்றிதழுக்கும்,
காந்தி நோட்டைக்
நீட்டும்போது 
வராத கோபம்,

அடுத்தவன்
அணைக்கட்டிலிருந்து
நீருக்காகக் கையேந்தும் போது
வருவது ஏனோ?

அனைத்தையும், உருவாக்கும்,
இளைஞர்பலமும், அறிவுபலமும்,
அளவிட முடியாது உள்ளபோது

அதிகார வர்க்கத்தின் 
மடைமையினால்
மடியேந்தி நிற்கிறதே

கலாச்சாரம் கண்டுபிடித்த
மனமுள்ள தமிழனமே.....

வி. பாலா



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு